தமிழகம், மதுரையில் இருந்து வெளியாகும் 'வணக்கம் இந்தியா' நாளிதழின் 03.11.2018 திகதிப் பதிப்பு மீதான 'சிகரம்' இணையத்தளத்தின் பார்வை இது. 8 பக்கங்களைக் கொண்ட இரு பகுதிகளுடன் 16 பக்கங்களில் இன்று வெளியாகியிருக்கிறது 'வணக்கம் இந்தியா' நாளிதழ்.
Saturday, November 3, 2018
Friday, November 2, 2018
இலங்கை | லொக்கீல் தோட்ட பாலம் புனரமைக்கப்படுமா?
கொட்டகலை லொக்கீல் தோட்டத்தில் அமைந்துள்ள இரண்டு பாலங்களும் சேதமடைந்துள்ளன. மக்களும் வாகனங்களும் அன்றாடப் பாவனைக்காக பயன்படுத்திவரும் பாதையிலேயே இந்த பாலங்கள் அமைந்துள்ளன. அண்மைகாலமாக மலையகப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக மண்சரிவு அனர்த்தங்களை அவதானித்து வருகிறோம்.
இலங்கை | சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது?
இலங்கையில் மலையக மக்கள் என்னும் சமூகம் உருவான கடந்த 200 ஆண்டுகளில் காலம் காலமாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் நாடற்றவர்களாக்கப்பட்டமை, வாக்குரிமை பறிக்கப்பட்டமை, இந்தியாவிற்கு திருப்பியனுப்பப்பட்டமை, பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டமை போன்ற பிரச்சினைகளை மலையக மக்கள் சந்தித்துள்ளனர்.
Thursday, October 25, 2018
இலங்கை | மலையகத்தின் எதிர்காலம்
மலையகத்தினதும் மலையக மக்களினதும் எதிர்காலம் குறித்து சிந்தித்தாக வேண்டிய காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். 1800களில் தமிழகத்தில் இருந்து கூலிகளாக அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் இன்றும் அதே நிலையில் தொடர்வது வேதனைக்குரியது. வாக்குரிமை பறிப்பு, நாடற்றவர்களாக்கப்பட்டமை, தமிழகத்திற்கு மீண்டும் திருப்பியனுப்பப்பட்டமை, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமை என்று பல்வேறு துன்பங்களைக் கடந்து இன்றைய மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
Monday, October 8, 2018
இந்தியா | சாத்தியமற்ற எழுவரின் விடுதலை
ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் எழுவரின் விடுதலை தொடர்பில் தற்போது உற்று நோக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றம் எழுவரின் விடுதலை தொடர்பில் தமிழக அரசு தங்கள் முடிவை ஆளுநருக்குப் பரிந்துரைக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது.
Friday, October 5, 2018
இலங்கை | தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 2018 வெளியீடு
கடந்த ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இந்தப் பரிட்சையில் 3,55,326 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
Thursday, October 4, 2018
உலகம் | நோபல் பரிசு 2018 | மருத்துவம் மற்றும் வேதியியல்
1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அல்ஃபிரெட் நோபல் என்பவற்றின் 1895ஆம் ஆண்டு உயிலின் படி நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தனியொருவருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, பொருளியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் நிகழ்த்தப்படும் சாதனைகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
Wednesday, October 3, 2018
இலங்கை | உடைத்தெடுக்கப்படும் மலையகம் - விழிப்புணர்வு தேவை
தற்காலத்தில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சூழல் மாசடைதல், வளி மாசடைதல், ஒலி மாசடைதல் என இயற்கை எல்லா வழிகளிலும் மாசடைந்து வருகிறது. உலகின் காலநிலை அமைப்பு படிப்படியாக மாறி வருகிறது.
Tuesday, October 2, 2018
இந்தியா | காந்தி ஜெயந்தி
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869.10.02 அன்று பிறந்தார். அறவழியில் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடினார். இவரது பிறந்தநாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
உலகம் | செய்தித் துளிகள் 01.10.2019
இந்தோனேசியாவில் சுனாமி
கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவின் சுலவேசி தீவை 7.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதன் காரணமாக 6 மீற்றர் உயர சுனாமி அலைகளும் உருவாகின.
Monday, October 1, 2018
உலகம் | தமிழ்த் தொலைக்காட்சிகளும் நமது எதிர்காலமும்
இன்று தொலைக்காட்சிகள் நம்மிடையே முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு தேவைக்காக தொலைக்காட்சிகளை நாடுகிறோம். இப்போது தொலைக்காட்சிப் பெட்டிகளின் வாயிலாகவே யூடியூப், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தும் வசதிகள் கூட வந்துவிட்டன. ஒரு திரையரங்கின் அளவுக்கு பாரிய திரைகளைக் கொண்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் கூட விற்பனைக்கு வந்துவிட்டன.
Saturday, September 29, 2018
இலங்கை | கூட்டு ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்ன?
கூட்டு ஒப்பந்தம் என்றால் என்ன?
"குறைந்தபட்ச சம்பளம் என்ற விடயம் முதன் முதலில் 1927ம் ஆண்டு சம்பளக் குழுவினால் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் (Minimum Wages Ordinance) கீழ் தீர்மானிக்கப்பட்டது. சம்பள நிர்ணயசபை தாபிக்கப்படும் வரை நாட் சம்பளத்தை தோட்ட உரிமையாளர்கள் தன்னிச்சையாகத் தீர்மானித்தனர். சம்பளத்திற்குப் பதிலாக அரிசி மற்றும் ஏனைய உணவு பண்டங்கள் வழங்கப்பட்டதுடன் தொடர்ச்சியான சம்பளமும் வழங்கப்படவில்லை.
Wednesday, September 26, 2018
இலங்கை | பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை - ஒரு பார்வை
மலையக மக்களின் அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் இதுவரை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த நிறுவனம் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகிறது. ஆனால் இது முழுமையான அரச நிறுவனம் அல்ல. ஆகவே அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் இதுநாள் வரை பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தன.
Sunday, September 23, 2018
இலங்கை | செய்தித் துளிகள் 2018/09/23
செப்டெம்பர் 25ஆம் திகதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் "ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் இணக்கமானதாக ஆக்குதல் மற்றும் அமைதியும் நேர்மையும் மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும் பகிர்ந்த பொறுப்புகளும்" என்னும் கருப்பொருளில் ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.
இந்தியா | செய்தித்துளிகள் 2018/09/23
இந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே அடுத்த வாரம் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்தாகியுள்ளது. இந்தவாரம் காஷ்மீரில் மூன்று காவல்துறையினரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றமை மற்றும் இந்திய இராணுவம் சுட்டுக் கொலை செய்த பாகிஸ்தான் தீவிரவாதி புர்ஹான் வானிக்கு பாகிஸ்தானில் தபால் தலை வெளியிட்டமை ஆகிய காரணங்களே பேச்சுவார்த்தை இரத்தானதின் பின்னணியாகும்.
Saturday, September 22, 2018
இலங்கை | வாகனங்களின் விலை உயரும் - இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறைந்தபட்சம் 250,000 இலங்கை ரூபாவினால் உயரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIAL) தெரிவித்துள்ளனர்.
இலங்கை | நாணய மாற்று விகிதம் 22.09.2018
1977 - 8.95 ரூபா
1989 - 36.06 ரூபா
1994 - 49.17 ரூபா
2005 - 100.38 ரூபா
2015 - 135.88 ரூபா
இலங்கை | இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்?
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் ஆட்சி மாற்றம் குறித்து தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அடுத்தடுத்து இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் முறையும் ஜனாதிபதியாகும் வாய்ப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் துணையுடன் முறியடித்து ஆட்சியைப் பிடித்தார் மைத்திரிபால.
Thursday, September 20, 2018
இலங்கை | அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
செப்டெம்பர் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் 4%த்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. அடிப்படைக் கட்டணமான 12 ரூபாவில் மாற்றம் இல்லை.
செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனியின் விலை கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனியின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் சீனியின் புதிய மொத்த விற்பனை விலை 105 ரூபாவாக அமையும்.
Wednesday, September 19, 2018
இலங்கை | பேரூந்து கட்டணம் அதிகரிப்பு
கடந்த 11ஆம் திகதி எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து பேரூந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கங்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் | முன்னாள் பிரதமர் நவாஸ் விடுதலை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த பத்து ஆண்டுகால சிறைத்தண்டனை இடைநிறுத்தி வைக்கப்படுவதாக பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை | செய்தித்துளிகள் 2018/09/19
காலநிலை
மத்திய, வடமேல், வடமத்திய, தென்மாகாணங்கள், பதுளை மற்றும் தென் மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். மத்திய, சப்ரகமுவ, மேல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும். வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
Tuesday, September 18, 2018
இலங்கை | செய்திகள் ஐந்து 18.09.2018 | யானை விபத்து - டாலர் பெறுமதி - தரமற்ற எண்ணெய் - படகு விடுவிப்பு - மனித அபிவிருத்தி சுட்டெண்
இன்று (18/9) செவ்வாய்க்கிழமை ஹபரண பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலில் மோதுண்டு இறந்துள்ளன. இரண்டு குட்டி யானைகளும் அவைகளின் தாயான கர்ப்பமான யானையுமே உயிரிழந்துள்ளன. எண்ணெய்த் தாங்கி ரயிலினாலேயே மேற்படி விபத்து நிகழ்ந்துள்ளது. இலங்கையில் தற்போது 7500 வரையிலான யானைகள் உள்ளன. கடந்த ஐந்து வருடங்களில் 375 பேர் யானைகளினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா | பள்ளி வளாகத்தில் பாலியல் வல்லுறவு | கருவைக் கலைத்த பள்ளி!
இந்தியா, உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளி வளாகத்தில் தங்கிப் படித்துவரும் 10ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படித்துவரும் 12ஆம் வகுப்பு நான்கு மாணவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் குறித்த மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கியுள்ளது. தகவலறிந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். விசாரணை இடம்பெற்று வருகிறது.
இலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு கண்டியில் - ஒரு தொகுப்பு
எம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 17.01.1917 அன்று மருதூர் கோபாலமேனன் சத்தியபாமா தம்பதிகளுக்கு இலங்கை, கண்டி, நாவலப்பிட்டியில் மகனாகப் பிறந்தார். எம்.ஜி.ஆரின் தந்தை வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு, கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். பின்னர் நாடகங்களில் நடித்து திரைப்பட நடிகரானார். தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார். 24.12.1987இல் எம்.ஜி.ஆர் காலமானார்.
Subscribe to:
Posts (Atom)