Pages

Tuesday, September 18, 2018

இந்தியா | பள்ளி வளாகத்தில் பாலியல் வல்லுறவு | கருவைக் கலைத்த பள்ளி!

இந்தியா, உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளி வளாகத்தில் தங்கிப் படித்துவரும் 10ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படித்துவரும் 12ஆம் வகுப்பு நான்கு மாணவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் குறித்த மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கியுள்ளது. தகவலறிந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். விசாரணை இடம்பெற்று வருகிறது. 


பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. என்னதான் சட்டங்கள் இயற்றினாலும் அவற்றால் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குழந்தைகள், இளம் பெண்கள், வயதானவர்கள் என யாரையும் பாலியல் குற்றங்கள் விட்டுவைப்பதாயில்லை. 

Image Credits to its owner only

பாடசாலை மாணவர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. அதற்கு பள்ளி நிர்வாகமும் துணைபோயிருக்கும் இந்த செய்தி அதற்கு மேலும் அதிர்ச்சி தருகிறது. பள்ளிக்கூடங்கள் கூட மாணவர்களுக்குப் பாதுகாப்பில்லையா? ஆசிரியர்களே குற்றத்துக்குத் துணை போவதா? 

சட்டங்களை கடுமையாக்குவதால் மட்டுமே பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாது. அரசு சமூக அமைப்பை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குற்றங்களுக்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும். குறிப்பாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். பாலியல் குற்றங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பு. 

#India #Uttarakhand #BJP #Congress #RapeAttempt #SexAbuse #School #SchoolStudent #PocsoAct #Law #Modi #News #Teachers #Student #SexEducation 

1 comment:

  1. இக்கொடுமை வரவர அதிகரித்துவருவது மிகவும் கொடுமை.

    ReplyDelete