Pages

Wednesday, September 19, 2018

இலங்கை | செய்தித்துளிகள் 2018/09/19

காலநிலை 

மத்திய, வடமேல், வடமத்திய, தென்மாகாணங்கள், பதுளை மற்றும் தென் மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். மத்திய, சப்ரகமுவ, மேல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும். வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். 




உண்ணாவிரதம் 

அனுராதபுரம் சிறைச்சாலையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள 8 கைதிகள் ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய தில்லைராஜ் என்னும் கைதி தற்போது வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

நிகழ்வு 

இந்திய அரசாங்கத்தின் ஊடாக யாழ் நூலகத்திற்கு 50,000 நூல்களை வழங்குதல் மற்றும் இலங்கை கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலைகளுக்கு புத்தகங்களை பெற்றுக்கொள்வதற்கான நிதியை வழங்கும் நிகழ்வும் நேற்று யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் இலங்கை ராஜாங்க கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

#Weather #LK #LKA #SL #SriLanka #News #NewsToday #Anuradhapura #TNGovt #Library #Education #WelikadaPrison #UpCountry #SigaramNews

No comments:

Post a Comment