மலையகத்தினதும் மலையக மக்களினதும் எதிர்காலம் குறித்து சிந்தித்தாக வேண்டிய காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். 1800களில் தமிழகத்தில் இருந்து கூலிகளாக அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் இன்றும் அதே நிலையில் தொடர்வது வேதனைக்குரியது. வாக்குரிமை பறிப்பு, நாடற்றவர்களாக்கப்பட்டமை, தமிழகத்திற்கு மீண்டும் திருப்பியனுப்பப்பட்டமை, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமை என்று பல்வேறு துன்பங்களைக் கடந்து இன்றைய மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
Thursday, October 25, 2018
Monday, October 8, 2018
இந்தியா | சாத்தியமற்ற எழுவரின் விடுதலை
ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் எழுவரின் விடுதலை தொடர்பில் தற்போது உற்று நோக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றம் எழுவரின் விடுதலை தொடர்பில் தமிழக அரசு தங்கள் முடிவை ஆளுநருக்குப் பரிந்துரைக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது.
Friday, October 5, 2018
இலங்கை | தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 2018 வெளியீடு
கடந்த ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இந்தப் பரிட்சையில் 3,55,326 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
Thursday, October 4, 2018
உலகம் | நோபல் பரிசு 2018 | மருத்துவம் மற்றும் வேதியியல்
1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அல்ஃபிரெட் நோபல் என்பவற்றின் 1895ஆம் ஆண்டு உயிலின் படி நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தனியொருவருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, பொருளியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் நிகழ்த்தப்படும் சாதனைகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
Wednesday, October 3, 2018
இலங்கை | உடைத்தெடுக்கப்படும் மலையகம் - விழிப்புணர்வு தேவை
தற்காலத்தில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சூழல் மாசடைதல், வளி மாசடைதல், ஒலி மாசடைதல் என இயற்கை எல்லா வழிகளிலும் மாசடைந்து வருகிறது. உலகின் காலநிலை அமைப்பு படிப்படியாக மாறி வருகிறது.
Tuesday, October 2, 2018
இந்தியா | காந்தி ஜெயந்தி
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869.10.02 அன்று பிறந்தார். அறவழியில் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடினார். இவரது பிறந்தநாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
உலகம் | செய்தித் துளிகள் 01.10.2019
இந்தோனேசியாவில் சுனாமி
கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவின் சுலவேசி தீவை 7.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதன் காரணமாக 6 மீற்றர் உயர சுனாமி அலைகளும் உருவாகின.
Monday, October 1, 2018
உலகம் | தமிழ்த் தொலைக்காட்சிகளும் நமது எதிர்காலமும்
இன்று தொலைக்காட்சிகள் நம்மிடையே முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு தேவைக்காக தொலைக்காட்சிகளை நாடுகிறோம். இப்போது தொலைக்காட்சிப் பெட்டிகளின் வாயிலாகவே யூடியூப், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தும் வசதிகள் கூட வந்துவிட்டன. ஒரு திரையரங்கின் அளவுக்கு பாரிய திரைகளைக் கொண்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் கூட விற்பனைக்கு வந்துவிட்டன.
Subscribe to:
Posts (Atom)