Tuesday, December 17, 2019
எட்டுத்திக்கும் செய்தி சொல்லும் சிகரம் செய்திகள்...!
2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் செய்தித் துறையில் சேவையாற்றி வருகிறது சிகரம்.
கையெழுத்துப் பத்திரிகையாக ஆரம்பித்த பயணம், வலைத்தளம், இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளம் என பல்வேறு பரிமாணங்களை அடைந்திருக்கிறது.
தொடர்ந்தும் மக்களுக்கு செய்திகளையும் பல்வேறு துறைசார்ந்த தகவல்களையும் கொண்டு செல்வதில் சிகரம் முன்னிற்கும்.
தொடர்ந்தும் எமது வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் எமது செய்திகளுடன் இணைந்திருங்கள்...
Monday, December 16, 2019
தரமுயர்த்தப்பட்ட இராணுவத்தினர்
இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவியில் தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதியின் கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இராணுவ ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நான்கு பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், 25 கொலொனெல்கள் பிரிகேடியர்களாகவும், 34 மேஜர்கள் லெப்டினன்ட் கொலொனெல்களாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)